

இந்த மாத ஆரம்பத்தில், ஜோன் கீல்ஸ் குழுமத்தின் சமூக தொழில்முனைவோர் திட்டமான பிளாஸ்டிக்சைக்கிள், நாடு முழுவதும் உள்ள பவளப்பாறைகள் மற்றும் உணர்திறன் வாய்ந்த கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளிலிருந்து கடல் குப்பைகள் மற்றும் கைவிடப்பட்ட மீன்பிடி உபகரணங்களை அகற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முயற்சியான “இலங்கைக்கான தூய்மையான கடற்படுகைகள்” பயணத்தை தொடர்ந்து ஆதரிப்பதற்காக தி பேர்ல் புரொடெக்டர்ஸ் (TPP) உடனான தனது கூட்டாண்மையை தொடர்ந்து மூன்றாவது ஆண்டு மீண்டும் உறுதிப்படுத்தியது.
ஏப்ரல் 2023 இல் ஆரம்பிக்கப்பட்ட இலங்கைக்கான தூய்மையான கடற்படுகைகள் பயணத்தின் மீதான இந்தக் கூட்டாண்மை, கடல் மேற்பரப்பிற்கு அடியில் அதன் பிளாஸ்டிக் மாசுபாட்டைக் குறைக்கும் முயற்சிகளை விரிவுபடுத்தவும், இலங்கையில் பிளாஸ்டிக் மாசுபாட்டைக் கணிசமாகக் குறைப்பதில் ஒரு வினையூக்கியாக இருக்க வேண்டும் என்ற அதன் தொலைநோக்குப் பார்வையுடன் ஒத்துப்போகவும் பிளாஸ்டிக்சைக்கிள் உதவியுள்ளது. இன்றுவரை, 175 PADI-சான்றளிக்கப்பட்ட தன்னார்வ மூழ்காளர்களின் ஆதரவுடன் 60 க்கும் மேற்பட்ட நீருக்கடியில் சுத்தம் செய்யும் முழுக்குகள் நடத்தப்பட்டுள்ளன, இதன் விளைவாக கைவிடப்பட்ட, தொலைந்த அல்லது நிராகரிக்கப்பட்ட மீன்பிடி துணைக்கருவிகள் (ALDFG), பிளாஸ்டிக் போத்தல்கள், உணவுப் பொதிகள் மற்றும் பிளாஸ்டிக் பைகள் உட்பட 1.9 மெட்ரிக் தொன் (MT) பிளாஸ்டிக் கழிவுகள் மீட்கப்பட்டுள்ளன.
ஜோன் கீல்ஸ் குழுமத்தின் பெருநிறுவன நிதி, குழு வரி மற்றும் சமூக தொழில்முனைவோர் ஆகியவற்றின் தலைவரும், நிர்வாக துணைத் தலைவருமான நிஸ்ரீன் ரெஹ்மான்ஜி கூறுகையில், “இந்த கூட்டாண்மை குறித்து நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். இந்த முயற்சிக்கு நாங்கள் தொடர்ந்து அளித்த ஆதரவு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எடுத்துக்காட்டாக, இது திருகோணமலையில் உள்ள திலிப் பவளப் பாறை மற்றும் அங்குலானாவின் கடற்கரையில் உள்ள புகழ்பெற்ற தெர்மோபைலே சியரா கப்பல் அழிபாடுகள் உள்ளிட்ட முக்கிய கடல் சார்ந்த இடங்களில் இருந்து கைவிடப்பட்ட மீன்பிடி வலைகளை முற்றிலுமாக அகற்றி, இந்த தளங்களை கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதுகாப்பான, ஆரோக்கியமான சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு மீட்டமைக்க வழிவகுத்தது. இந்தத் திட்டத்தில் சுத்தம் செய்வது மட்டுமல்லாமல், கொழும்பு, மிரிஸ்ஸா, வெலிகம, மன்னார், காயங்கெராணி மற்றும் திருகோணமலை போன்ற கடலோரப் பகுதிகளில் இந்த பயணத்தின் தன்னார்வலர்களால் நடத்தப்பட்ட விரிவான கடல் குப்பை கணக்கெடுப்புகளும் அடங்கும். இது சிறந்த கடல் கழிவு மேலாண்மை உத்திகளைத் தெரிவிக்க தரவுகளைச்சேகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ”
TPP இன் நிறுவனர்/நிர்வாக இயக்குநர் முதித கட்டுவாவல கூறுகையில், “Plasticcyle மற்றும் The Pearl protectors இடையேயான கூட்டுழைப்பு இலங்கையில் கடல் பாதுகாப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்துள்ளது. இலங்கையைச் சுற்றியுள்ள உணர்திறன் வாய்ந்த கடல் சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் பாறைகளை பல்வேறு வகையான மாசுபாட்டிலிருந்து புத்துயிர் பெறச் செய்வதிலும் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்தும் முதல் வகையான பாதுகாப்பு முயற்சியே இலங்கைக்கான தூய்மையான கடற்படுகைகள் ஆகும். பல ஆண்டுகளாக, இதுபோன்ற பகுதிகளை துடிப்பான மற்றும் ஆரோக்கியமான சுற்றுச்சூழல் அமைப்புகளாக மாற்றுவதற்கான குறிப்பிடத்தக்க இலக்குகளை நாங்கள் அடைந்துள்ளோம்.”
ALDFG மட்டுப்படுத்தலில் அவர்களின் தலைமையை அங்கீகரிக்கும் விதமாக, சுற்றாடல் அமைச்சால் ALDFG மாசுபாடு குறித்த தேசிய வழிகாட்டுதல் குழுவிற்கு வழிகாட்டும் குழுவொன்று நியமிக்கப்பட்டது. அவர்கள் கழிவு மீன்பிடி உபகரணங்களை, குறிப்பாக நைலான் அடிப்படையிலான பொருட்களை சேகரித்து மீள்சுழற்சி செய்வதை மேம்படுத்துவதற்கான தேசிய முயற்சிகளை ஆதரிக்கின்றனர்.
Plasticcyle என்பது ஜோன் கீல்ஸ் குழுமத்தின் சமூக தொழில்முனைவோர் திட்டமாகும். கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள மிகப்பெரிய கூட்டு நிறுவனமான John Keells Holdings PLC (JKH), 7 மாறுபட்ட தொழில் துறைகளில் 70 க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் செயல்படுகிறது. 150 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட ஜோன் கீல்ஸ் குழுமம் 14,000 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது மற்றும் LMD பத்திரிகையால் கடந்த 17 ஆண்டுகளாக இலங்கையின் 'மிகவும் மதிக்கப்படும் நிறுவனம்' என்று தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்காவின் “நிறுவன அறிக்கையிடல் மதிப்பீட்டில் வெளிப்படைத்தன்மை” யில் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்தது. உலக பொருளாதார மன்றத்தின் முழு அங்கத்தவராக இருக்கும் அதே வேளை, ஐ.நா குளோபல் கொம்பக்டின் அங்கத்துவத்தையும் கொண்ட JKH, John Keells Foundation ஊடாக அதன் கூட்டாண்மை சமூக பொறுப்பாக 'எதிர்காலத்திற்கான நாட்டினை கட்டியெழுப்புதல்' என்பதை நோக்கி பயணிக்கின்றது.